கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலை கின்னஸ் விருது

தமிழகத்தின் கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று  கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது: 

"உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம், அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம், நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம். இந்த சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்."

இந்த சாதனை ஈஷாவிற்குகிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் திருமுகச்சிலையை வடிவமைக்க 2.5 ஆண்டுகள்ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும், அதற்கு காரணம் இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டார்களின் அர்ப்பணிப்புதான் என்றும் ஈஷாவின் நிறுவனர் சத்குரு இச்சிலை திறப்பின் போது கூறியிருந்தார்.

மக்களுக்கு ஊக்கம் ஊட்டிடும் ஒரு பிரம்மாண்ட அடையாளம் தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தை கொண்டு வரவிரும்பினால், அதற்கான தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர்ந்திட ஆதியோகி ஒரு அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவித்திட அமைந்துள்ளார். முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்திற்கான 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச்சிலை அமைந்துள்ளது.

யோகபாரம்பரியத்தில் சிவனையோக விஞ்ஞானத்தின் மூலமான முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர். இதை போன்று மேலும் மூன்று 112 அடி முகங்கள் இந்தியாவின் மூன்று மூலைகளில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...