கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘காட்மா’ தொழில் அமைப்பு, மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பி, பிரச்சனைக்கு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கமான ‘காட்மா’, தமிழகத்தில் நீடித்து வரும் மின்தடை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘காட்மா’ தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

“கடந்த சில நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்பட்ட பிறகு அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆகுவதால் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை நீடிப்பதால் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படாததால் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகாரிகளே உதவியாளர்களின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணம், உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் யூனிட் கட்டணம் உள்ளிட்டவை பலமடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படாதது கவலைக்கிடமானது. இது எதிர்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகளை மேலும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

மேலும், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தொழில் அமைப்புகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...