கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘காட்மா’ தொழில் அமைப்பு, மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பி, பிரச்சனைக்கு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கமான ‘காட்மா’, தமிழகத்தில் நீடித்து வரும் மின்தடை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘காட்மா’ தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

“கடந்த சில நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்பட்ட பிறகு அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆகுவதால் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை நீடிப்பதால் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படாததால் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகாரிகளே உதவியாளர்களின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணம், உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் யூனிட் கட்டணம் உள்ளிட்டவை பலமடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படாதது கவலைக்கிடமானது. இது எதிர்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகளை மேலும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

மேலும், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தொழில் அமைப்புகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...