கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த சில நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகின.



குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டு பகுதி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை அகற்றும் பணியிலும் மின் இணைப்பை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...