கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த சில நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகின.



குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டு பகுதி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை அகற்றும் பணியிலும் மின் இணைப்பை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...