“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சித்தார்.


Coimbatore:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய செயல்பாடுகள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை பலவீனப்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

“துறைகள் தற்போது தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேறும். வீட்டுப் பொருளாதாரம் குறித்து திடீரென கேள்வி கேட்டால் உடனே எல்லாவற்றையும் சொல்ல முடியாததைப் போல, அரசின் நிர்வாகமும் கட்டுக்கோப்பாக முன்னேறும்,” என்றார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் ஆரம்ப நடவடிக்கைகளைப் பற்றி பேசிய அவர், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் கூறினார்.

“முதலமைச்சர் விஜய் போன்றவர் மட்டுமே பதவியேற்ற உடனேயே இவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகளை பார்க்கும் போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கம் பலவீனமடைந்துள்ளது போல தெரிகிறது,” என்றார்.

“நான் தான் எல்லாம் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். காலம் அதற்கான பதிலை சொல்லும்,” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார்.

எதிர்கால அரசியல் அமைப்பில் அதிமுகவுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “இதுவரை அதுபற்றி எதுவும் கூறப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்துகள், அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி விவாதங்கள் மற்றும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...