கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:

கோவை இருகூர் அருகே மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன், அவனது சக நண்பர்களாலேயே தாக்கிக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகன், ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த 15ஆம் தேதி நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “யாரோ ஒருவருடன் அவன் தனியாகச் சென்றான்” என அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறுவன் மாயமானதாக பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனுடன் கடைசியாக இருந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்கள் அங்கு கிடந்த காலி மதுபாட்டிலால் மாணவனின் தலையில் தாக்கியதாகவும் தெரியவந்தது. பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பயத்தில், உடலை அருகிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் காட்டிய இடத்தில் இன்று காலை போலீசார் உடலை தோண்டி எடுத்து மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் இருகூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...