நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கோவை: கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அச்சங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நீலாம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் நள்ளிரவில் நடந்த மோதல் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவில் சம்பவ இடம் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

போதை அல்லது பணத் தகராறு காரணமாக, இருவர் சேர்ந்து வாலிபரை தாக்கி கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அச்சங்குளம் மற்றும் நீலாம்பூர் பைபாஸ் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகன எண்களின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...