திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் தங்கி வசிக்கும் ‘லைன் வீடு’ ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்பவரும் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...