ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் பெற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Coimbatore: கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டுகாணிக்கை தொகை கணக்கிடப்பட்டது.
இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.61,65,504 ரொக்கம், 47 கிராம் தங்கம், 201 கிராம் வெள்ளி பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் தக்கார் த. ராஜ்குமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சு. சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதிகள், பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி, ஆனைமலை சரக ஆய்வர் ப. சித்ரா, திருக்கோயில் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.61,65,504 ரொக்கம், 47 கிராம் தங்கம், 201 கிராம் வெள்ளி பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் தக்கார் த. ராஜ்குமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சு. சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதிகள், பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி, ஆனைமலை சரக ஆய்வர் ப. சித்ரா, திருக்கோயில் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.