மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 39வது முறையாக போலி மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை:

கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.



முன்னதாக கோவை பாஸ்போர்ட் அலுவலகம், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அடிக்கடி மிரட்டல் இ-மெயில்கள் வந்து வருகின்றன.

நேற்று முன்தினம் மிரட்டல் வந்திருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது.



இதையடுத்து அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், இந்த மிரட்டலும் வழக்கம்போல வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பி வரும் மர்ம நபரை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பும் நபர் அடிக்கடி இ-மெயில் முகவரிகளை மாற்றி, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...