கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் IPS சம்பவ இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


coimbatore: சூலூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமி, கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.



இந்த சம்பவத்துக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக காவல் துறைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு நேரில் வருகை தந்தார்.



சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளம் பகுதிக்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.



அப்போது, குற்றவாளிகள் எந்த வழியாக வந்திருக்கக்கூடும், சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி, இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...