கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பிரச்சனை காரணமாக நடந்த இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.




இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 84/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





காதல் பின்னணியும் குற்ற வரலாறும்




காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த பழக்கம் படிப்படியாக காதலாக மாறியதாக கூறப்படுகிறது.




பின்னர், கார்த்தியின் பின்னணியை விசாரித்தபோது, அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண், கார்த்தியுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்.





திட்டமிட்ட தாக்குதல்




இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் வந்து, எரியக்கூடிய திரவம் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன்புறத்தில் தீப்பற்றி எரிந்தது.




சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.





தீவிர தேடுதல் நடவடிக்கை




சம்பவம் தொடர்பாக கார்த்தி என்கிற மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...