கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500 வரை கட்டாயமாக “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்காக வழங்கப்படும் இலவச வீல்சேர் சேவைக்கு சில ஊழியர்கள் கட்டாயமாக பணம், அதவாது “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.




கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினசரி சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை காலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.




பயணிகளின் வசதிக்காக விமான நிறுவனங்கள் சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் பயன்பெறும்படி வீல்சேர் சேவை முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த சேவையை வழங்கும் சில ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையை கேட்டு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் உள்ளது. ஆனால், சில ஊழியர்கள் 'இது இலவச சேவைதான், இருந்தாலும் ரூ.500 வரை டிப்ஸ் கொடுக்கலாம்' என்று தெரிவித்து மறைமுகமாக பணம் கேட்கின்றனர்.

பொதுவாக,பயணிகள் தங்கள் விருப்பத்துடன் உதவித்தொகை வழங்குவது வேறு விஷயம். ஆனால், இந்த சேவை குறித்து தெளிவாக தெரியாதவர்களிடம், குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது முற்றிலும் தவறானது," என்று கூறினர்.




மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க விமான நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து, விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை முழுமையாக இலவசம். இதற்காக எந்தவொரு பயணியிடமும் கட்டாயமாக பணம் கேட்பது முற்றிலும் தவறான செயல். யாரேனும் ஊழியர்கள் பணம் கேட்டால் அல்லது வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் அல்லது விமான நிலைய மேலாண்மை அலுவலகத்தில் பயணிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தனர்.


Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...