கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது. 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதியுடன், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையின் பெருமையான ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனம் தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.2026) திறந்தது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் புதிய கிளையை திறந்து வைத்தார். முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி, ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலசந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ் தாமோதரசாமி மற்றும் எக்ஸிகியூட்டிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளையில் பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிளையின் முதல் விற்பனையை எஸ்கேயம் (SKM) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சிவகுமார் தொடங்கி வைத்தார். அதை அவன்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ். குமரன் பெற்றுக்கொண்டார்.

மேலும், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

100 கார்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அன்னபூர்ணா குழும ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...