+2 பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாமரைச்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று தாமரைச்செல்வி எதிர்பார்த்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில் தாமரைச்செல்வி தான் எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து ஆயிரத்து 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வில் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் தாமரைச்செல்வி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், சம்பவ இடதிற்கு சென்று தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...