சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகியோர் கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இழந்த பணத்தை இரும்பு கடை உரிமையாளர் தானாராமிடம் திரும்ப வழங்கிய காவல்துறை, நேர்மையான இருவருக்கும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தது.


Tiruppur: திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மதன், சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினரால் பாராட்டப்பட்டார்.






வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் பணிபுரியும் மதன், இன்று காலை தனது உறவினர் பிரபுவை அழைத்துக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் வழியில், வளம் பாலம் பகுதியில் கீழே கிடந்த பிங்க் நிற பையை கவனித்தார். அதை எடுத்து பார்த்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இருவரும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.






காவல்துறையினர் பையை சோதனை செய்தபோது ₹5,64,000 இருந்தது உறுதியானது. அதே சமயம், ராஜஸ்தானைச் சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ₹5.64 லட்சம் எடுத்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்துவிட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.




பையில் இருந்த அடையாளங்கள் மற்றும் பணம் உறுதி செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினர் தானாராமிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். துணை ஆணையர் தீபாசத்யன் மற்றும் உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.




மேலும் துணை ஆணையர் தீபாசத்யன், மதன் மற்றும் பிரபு இருவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். "ஒவ்வொரு குடிமகனும் இதே போல பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பணம் இழந்தவர்கள் துயரப்பட்ட நிலையில், இரண்டு நல்ல மனங்கள் பணத்தை கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்தனர். அதேபோல் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என துணை ஆணையர் தீபாசத்யன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...