கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தினார். மாவட்ட அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவையில் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்ற நிலையை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதையடுத்து, திட்டங்கள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய அமைச்சர், பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...