வைசியால் வீதி பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம்- பொதுமக்கள் அவதி


கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக அத்யாவசியத் தேவைக்குக்கூட நீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் இரு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்றே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.



இந்நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் சாக்கடை நீர் கலந்து வருவதாக வைசியால் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இன்று வைசியால் வீதி வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நீர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வைசியால் உள்ளிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றே சாக்கடை நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக்திடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...