திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையின் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோயிலை திறந்து வழக்கமான பூஜைக்காக சென்றபோது, மூலவர் சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர் இரும்புக் கம்பி கொண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோயிலுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதே கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு முயற்சி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...