கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை மேலாண்மை, சாலை சுத்தம் ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று பல்வேறு மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.






முதலில், ராஜகோபால் லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலை கடையை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அவர் பொதுமக்களிடம் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். இதில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






இதைத் தொடர்ந்து, ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஏபிசி மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சாலையோரத்தில் செடிகள் குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜூன் 4ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதால், சுத்தம் செய்யப்பட்ட செடிகள் குப்பைகள் உடனடியாக எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் உத்தரவிட்டார்.






அதைத் தொடர்ந்து, என் ஜிஆர் வீதி மற்றும் இஎஸ்ஐ காம்பவுண்ட் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிறிய சாலையாக உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுத்தம் செய்யப்பட்ட சாக்கடை மண்கள் இரண்டு நாட்களுக்குள் எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசரிடம் கவுன்சிலர் கூறினார்.






கள்ளிமேடு வீதி பகுதியில், தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தரும்படி அறிவுறுத்தினார்.






இறுதியாக, பி ஆர் பி கார்டன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குப்பைகள் போட வேண்டாம் என பிளக்ஸ் வைக்குமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.


Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...