கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை நிலவி வருகிறது.

அதிக பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



மேலும், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்கி வரும் Crystal நிறுவனத்தில் பணியாற்றிய 10 ஊழியர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்களை ESI மருத்துவமனைக்கு மாற்றவும், அதே நேரத்தில் ESI மருத்துவமனையில் பணியாற்றி வரும் 10 பேரை அரசு மருத்துவமனைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலேயே அமர்த்த வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் இருந்து ESI மருத்துவமனைக்கு அல்லது ESI மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




இந்த பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவமனையின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...