காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் பகுதியில், தனியார் காகித ஆலைக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைக்கு சென்னையில் இருந்து 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த துரை (40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை தேவனாபுரம் அருகே வந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த பேப்பர் கழிவுகள் சாலையில் சிதறின. மேலும், லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நள்ளிரவு நேரமாக இருந்ததால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிக பாரம் காரணமாக முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...