கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூக்கள் வழங்கி பேண்டு வாத்தியத்துடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். மாணவிகள் மொபைல் எடுத்து வராமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்தனர்.


Tiruppur: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்து வகை பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டின் முதல் நாளில் மாணவிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.






பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ஆசிரியர்கள் ஒழுங்குப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். முதல் நாள் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்ல மனமின்றி பள்ளி வளாகத்தின் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






பள்ளிக்கு வரும் மாணவிகள் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என போலீசார் அறிவுரை செய்து பள்ளிக்குள் மாணவிகளை அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பள்ளி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் வருகை தந்த 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளித்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவிகளை பள்ளிக்குள் ஊர்வலமாக அழைத்து சென்று அவரவர் வகுப்பறைகளில் அமர வைத்தனர்.




புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கிய மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து புதிய கல்வியாண்டை தொடங்கினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...