கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மே 29, 2026 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகிய துறைகளில் சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்றனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நடத்தப்பட்ட நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே 29, 2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய Dr. இராச. வசந்தகுமார், குழந்தைகள் பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற நிகழ்த்துக் கலைப்புலம் நடத்திய கோடை கால பயிற்சி வகுப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்ததைப் பாராட்டினார். குழந்தைகள் இளமையில் கற்பது மனதை நல்வழியில் பக்குவப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் Dr. சு.இரவி மற்றும் உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் (IQAC) இயக்குநர் T. சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்த்துக் கலைப்புல முதன்மையர், பேராசிரியர் Dr. வெ.ஜனகமாயாதேவி விழாவில் வரவேற்புரையாற்றினார்.

நான்கு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர். குழந்தைகளுக்கு பல்வேறு கலை வடிவங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் Dr. பிரசீதா பால் நன்றியுரையாற்றினார். கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி குழந்தைகள் கலை பயிற்சி பெற்று சிறப்பித்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...