விபத்துக்குப் பிறகே பாதுகாப்புப் பலகை? கோவையில் ரயில்வே கட்டுமானக் குழியில் விழுந்து முதியவர் படுகாயம்

கோவை: தண்ணீர் பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கோவை: கோவை தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.




கோவை தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் பல மாதங்களாக ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் பல இடங்களில் ஆழமான அஸ்திவாரக் குழிகள் தோண்டப்பட்டு, இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இருந்த கட்டுமானக் குழியை கவனிக்காமல் சைக்கிளோடு நேரடியாக அதற்குள் விழுந்தார்.






குழிக்குள் இருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் காரணமாக அவர் படுகாயமடைந்து அங்கிருந்தே எழ முடியாமல் தவித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழிக்குள் இறங்கி முதியவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்த விபத்துக்கு முக்கிய காரணம், கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரின் அலட்சியம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஆபத்தான குழிகள் தோண்டப்பட்டிருந்த போதிலும், அவற்றைச் சுற்றி போதுமான பாதுகாப்புத் தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.






மேலும், விபத்து நடந்த பின்னரே ஒப்பந்ததாரர் தரப்பினர் அவசர அவசரமாக சம்பவ இடத்தில்

பாதுகாப்புப் பலகைகள் மற்றும் தடுப்புகளை அமைத்ததாகவும், தங்களது அலட்சியத்தை மறைக்க முயற்சித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், விபத்தில் காயமடைந்த முதியவருக்கு ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து உரிய மருத்துவ உதவி அல்லது நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.




கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாலக் கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அலட்சியம் காட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...