சூலூர் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்; போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கபட்டனர்.


கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...