கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு, வெள்ளிச் சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.47 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் வெள்ளிச் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கதிர் (20) என்ற கல்லூரி மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி-டெக் ஐடி படித்து வருகிறார். கடந்த ஜூன் 5-ம் தேதி தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த அவரை ரிஸ்வான், சாஹிர், ஜெகநாத் மற்றும் அபுஸ் ஆகிய நான்கு பேர் திடீரென சூழ்ந்து மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மண்டியிடுமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருப்பதாகக் கூறி கடுமையாக மாணவரை அச்சுறுத்தியுள்ளனர். பயந்து போன மாணவர் அவர்கள் கூறியபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47,000 ஐ அவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

பணம் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் அவரிடம் இருந்த ஒரு வெள்ளிச் சங்கிலி மற்றும் Vivo T2 Pro செல்போனையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

மாணவர் கதிர் அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கொள்ளை, மிரட்டல் மற்றும் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட தீவிர வேட்டையில் குற்றச்சாட்டுக்குள்ளான நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள ஒரு குற்றவாளியை கைது செய்ய போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...