மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



விவசாயிகள் அளித்த மனுவில், காரத்தொழவு பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாய்க்காலை நம்பியுள்ள சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நஞ்சை நிலங்கள் போதிய பாசன வசதி பெற முடியாமல் உள்ளதாகவும், இதன் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வாய்க்காலில் படிந்துள்ள மணல் மற்றும் புதர்களால் நீரோட்டம் தடைபட்டு, நிலங்களுக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் முறையான சாகுபடி மேற்கொள்ள முடியாமல் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீரோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...