சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு


கோவை சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்: 1531) அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் அமைப்பு அளித்துள்ள மனுவில், குடியிருப்புகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் நிறைந்த பகுதி கோவை சிவானந்தா காலனி. இப்பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை (எண்: 1531) செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வரும் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையைக் கடந்தே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மேலும், சாலையோரம் நிற்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்தும் மது அருந்தி வருகின்றனர். இதனால், பெண்கள் வெளியில் செல்வே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இருந்தபோது மனு அளித்தோம். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட அட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...