பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலர்கள்: காதலி பரிதாப சாவு


தாராபுரம் உப்பர் டேம் பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகள் அஞ்சு (19). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்தனர். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அஞ்சு மற்றும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஞ்சு நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், அஞ்சு-வை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சு இன்று காலை பரிதாபமாக பலியானார். காதலி விஷம் அருந்தியதை அறிந்த சஞ்சீவ் நேற்று விஷம் குடித்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சஞ்சீவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது சஞ்சீவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...