மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்


மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசிக்கும் ரவி என்பவரது மகன் உதயா (20). இவரது மனைவி ஆனந்தி (18). இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தி வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஆனந்தி தலைவலிக்கு சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 14 எண் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, தாலூகா அலுவலகம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது உதயா தனது மனைவி ஆனந்தியை சமாதானம் செய்து சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஆனந்தி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த உதயா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் மார்பில் குத்திவிட்டு உதயா தப்பி ஓடியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய உதயாவை தேடிவருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...