மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டதாக ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கோவை: உலகளவில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் முன்னணி இலாப நோக்கமற்ற அமைப்பான அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association), கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ‘காம்பிரஹென்சிவ் செஸ்ட் பெயின் சென்டர்’ (Comprehensive Chest Pain Center) என்ற சர்வதேச சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளது.
மாரடைப்பு மற்றும் தீவிர நெஞ்சுவலி நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை தாமதமின்றி, சர்வதேச தரநிலைகளின்படி, ஆதாரப்பூர்வமான மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வழங்குவதில் மருத்துவமனை சிறந்து விளங்கியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் இதயவியல் துறையின் மூத்த மருத்துவர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 30 முதல் 69 வயதுக்குட்பட்டோரின் உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீதம் இதய மற்றும் இரத்த நாள நோய்களால் ஏற்படுவதாகவும், சமீபத்திய தரவுகளின்படி மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 12.5 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இதய நோய்களின் அதிகரித்து வரும் தாக்கம், குறிப்பாக ST-Elevation Myocardial Infarction (STEMI) எனப்படும் தீவிர மாரடைப்பு நோயாளிகளுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் Comprehensive Chest Pain Center சான்றிதழ், STEMI மற்றும் பிற தீவிர மாரடைப்பு நோயாளிகளுக்கு சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சிகிச்சை வழங்கும் திறன் கொண்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மாரடைப்பை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, அதிநவீன இதய சிகிச்சைகளை உடனடியாக வழங்கும் திறன், 24 மணி நேர அவசர சிகிச்சை வசதி, சிறப்பு இதய மருத்துவக் குழு, மேம்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.
மேலும், இந்தச் சான்றிதழ் பெறும் மருத்துவமனைகள் ஆதாரப்பூர்வ மருத்துவ நடைமுறைகள் (Evidence-based Clinical Protocols), தொடர்ச்சியான தர மேம்பாட்டு செயல்முறைகள் மற்றும் நெஞ்சுவலியுடன் வரும் நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் அமைப்புகளை திறம்பட செயல்படுத்தி வர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மையத்தின் முக்கிய அம்சமாக, இதயத் தமனிகளில் ஏற்பட்ட அடைப்புகளை உடனடியாக அகற்றி, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பெர்கியூட்டேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (Percutaneous Coronary Intervention – PCI) எனப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை விரைவாக மேற்கொள்ளும் திறன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், மாரடைப்பு நோயாளிகளின் உயிரிழப்பு மற்றும் இதய தசை சேதத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் சர்வதேச குழுவின் இணைத் தலைவர், “உலகளவில் இதய நோய்களே உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக உள்ளன. மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானது. மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு விரைவாகவும் திறம்படவும் சிகிச்சை வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த Comprehensive Chest Pain Center சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனைகள் சிகிச்சை தரத்தை மேம்படுத்தவும், STEMI மற்றும் NSTEMI நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்கவும் உதவுகிறது,” என்றார்.
இந்த சர்வதேச அங்கீகாரத்தின் மூலம், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாட்டில் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கான அவசர இதய சிகிச்சை துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாரடைப்பு மற்றும் தீவிர நெஞ்சுவலி நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை தாமதமின்றி, சர்வதேச தரநிலைகளின்படி, ஆதாரப்பூர்வமான மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வழங்குவதில் மருத்துவமனை சிறந்து விளங்கியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் இதயவியல் துறையின் மூத்த மருத்துவர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 30 முதல் 69 வயதுக்குட்பட்டோரின் உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீதம் இதய மற்றும் இரத்த நாள நோய்களால் ஏற்படுவதாகவும், சமீபத்திய தரவுகளின்படி மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 12.5 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இதய நோய்களின் அதிகரித்து வரும் தாக்கம், குறிப்பாக ST-Elevation Myocardial Infarction (STEMI) எனப்படும் தீவிர மாரடைப்பு நோயாளிகளுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் Comprehensive Chest Pain Center சான்றிதழ், STEMI மற்றும் பிற தீவிர மாரடைப்பு நோயாளிகளுக்கு சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சிகிச்சை வழங்கும் திறன் கொண்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மாரடைப்பை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, அதிநவீன இதய சிகிச்சைகளை உடனடியாக வழங்கும் திறன், 24 மணி நேர அவசர சிகிச்சை வசதி, சிறப்பு இதய மருத்துவக் குழு, மேம்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.
மேலும், இந்தச் சான்றிதழ் பெறும் மருத்துவமனைகள் ஆதாரப்பூர்வ மருத்துவ நடைமுறைகள் (Evidence-based Clinical Protocols), தொடர்ச்சியான தர மேம்பாட்டு செயல்முறைகள் மற்றும் நெஞ்சுவலியுடன் வரும் நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் அமைப்புகளை திறம்பட செயல்படுத்தி வர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மையத்தின் முக்கிய அம்சமாக, இதயத் தமனிகளில் ஏற்பட்ட அடைப்புகளை உடனடியாக அகற்றி, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பெர்கியூட்டேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (Percutaneous Coronary Intervention – PCI) எனப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை விரைவாக மேற்கொள்ளும் திறன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், மாரடைப்பு நோயாளிகளின் உயிரிழப்பு மற்றும் இதய தசை சேதத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் சர்வதேச குழுவின் இணைத் தலைவர், “உலகளவில் இதய நோய்களே உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக உள்ளன. மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானது. மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு விரைவாகவும் திறம்படவும் சிகிச்சை வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த Comprehensive Chest Pain Center சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனைகள் சிகிச்சை தரத்தை மேம்படுத்தவும், STEMI மற்றும் NSTEMI நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்கவும் உதவுகிறது,” என்றார்.
இந்த சர்வதேச அங்கீகாரத்தின் மூலம், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாட்டில் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கான அவசர இதய சிகிச்சை துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.