தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வருவாய்கள் மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ADSP ராஜேஷ் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒன்பது போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

சோதனையின் முடிவில், m கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில் மொத்தமாக ₹31,27,110 ரொக்கப் பணமும், GPay பரிவர்த்தனைகள் மூலம் ₹26,70,990-மும் கண்டறியப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வருவாய்கள் மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ADSP ராஜேஷ் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒன்பது போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
சோதனையின் முடிவில், m கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில் மொத்தமாக ₹31,27,110 ரொக்கப் பணமும், GPay பரிவர்த்தனைகள் மூலம் ₹26,70,990-மும் கண்டறியப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.