சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து, இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், வீடியோ எடிட்டிங் தொழில் செய்து வருகிறார். திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வசித்து வரும் அவருக்கு 4 வயது மகன் உள்ளார். சூலூர் கலையரங்கம் அருகே வாடகை அலுவலகத்தில் அவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அதே கட்டிடத்தில் தங்கி இருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பழகியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் அந்தோணி மரிய ராபின் தனது நண்பரான கிரிஷ் சாமுவேல் குமாருடன் அந்தப் பெண்ணை சந்தித்தபோது, மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாகவும், மயக்கமடைந்த நிலையில் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறி, திருமணம் குறித்து வற்புறுத்தினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவரையும் அவரது மகனையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அந்தோணி மரிய ராபின் (28) மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினை கைது செய்ய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...