கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறி கரூரைச் சேர்ந்த இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் தடாகம் அருகே மடத்தூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பிரவீன் (24), கடந்த வாரம் புதிய போட்டோஷூட் ஆர்டர் வந்துள்ளதாகக் கூறிவிட்டு ஒட்டன்சத்திரத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இதற்கிடையில், கிணத்துக்கடவு அருகே ஏ.பி.சி. தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் காணாமல் போன பிரவீன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டத்தில் இது ரயிலில் அடிபட்டு ஏற்பட்ட மரணமாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் எதிர்பாராத திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், போட்டோஷூட் இருப்பதாகக் கூறி பிரவீனை ஒட்டன்சத்திரத்திற்கு வரவழைத்த அவர்கள், இரவு தங்க வைத்ததுடன் மதுபானம் அருந்தச் செய்ததாகவும், பின்னர் காரில் அழைத்துச் செல்லும் போது கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக
கூறப்படுகிறது.
பின்னர், கொலையை ரயில் விபத்து அல்லது தற்கொலை போல் சித்தரிக்கும் நோக்கில், பிரவீனின் உடலை கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாகவும், அதன் பின்னர் அந்த வழியாக வந்த ரயில் உடலின் மீது ஏறிச் சென்றதால் உடல் சிதைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தடாகம் போலீசாரும், போத்தனூர் ரயில்வே போலீசாரும் வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கிணத்துக்கடவு அருகே ஏ.பி.சி. தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் காணாமல் போன பிரவீன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டத்தில் இது ரயிலில் அடிபட்டு ஏற்பட்ட மரணமாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் எதிர்பாராத திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், போட்டோஷூட் இருப்பதாகக் கூறி பிரவீனை ஒட்டன்சத்திரத்திற்கு வரவழைத்த அவர்கள், இரவு தங்க வைத்ததுடன் மதுபானம் அருந்தச் செய்ததாகவும், பின்னர் காரில் அழைத்துச் செல்லும் போது கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக
கூறப்படுகிறது.
பின்னர், கொலையை ரயில் விபத்து அல்லது தற்கொலை போல் சித்தரிக்கும் நோக்கில், பிரவீனின் உடலை கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாகவும், அதன் பின்னர் அந்த வழியாக வந்த ரயில் உடலின் மீது ஏறிச் சென்றதால் உடல் சிதைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தடாகம் போலீசாரும், போத்தனூர் ரயில்வே போலீசாரும் வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.