மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் விசப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் மற்றும் பல நூறு கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றினர்.



மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையானது நீலகிரிக்கு இடையூறின்றி செல்லும் சாலை ஆகும். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த இந்தச் சாலையினை ஒருசில பயணிகளே பயன்படுத்தி வரும் நிலையில், ஒருசிலர் அந்த சாலையில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். மேலும், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் சாலையில் வீசிச் செல்கின்றனர். 



இந்தச் சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட சாலை மற்றும் யானைகள் வழித்தடப் பாதையாகும். இதனால் சாலையில் வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து யானைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் வைல்டு லைஃப் நேட்சர் கன்சர்வேசன் டிரஸ்ட், ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள், ஷெட்எஃப் வின்டு பவர் தனியார் நிறுவன ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வனத்துறையுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இந்த தூய்மைப் பணியின் போது மேட்டுப்பாளையம்- கோத்தகிரிக்கு உட்பட்ட சாலையில் 300 மதுபான பாட்டில்களும், 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் சேகரிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனப்பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்போதே வளமான பசுமையும், வன விலங்குகளும் காக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...