மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில், மாணவிகள் தொழில்முனைவோராக உருவாகி சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஆர். எழிலி தலைமை வகித்தார். பிரபல் தொழில் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவுத் தலைவர் வித்யா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தற்போது வரலாறு காணாத அளவில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சவால்களையும் இன்னல்களையும் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்ள வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி தொழில்முனைவோராக உருவானால் தங்களது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், பேச்சாற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்வது எந்தத் துறையிலும் வெற்றிக்கு அவசியமானது என்றும், புதிய சிந்தனைகள், புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மற்றும் நன்றி உணர்வு ஆகியவை தொழில்முனைவோரின் முக்கிய பண்புகளாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த

அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கனகராஜ்

பேசுகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், தொழில்முனைவோராக உருவாகுவதன் மூலம் குடும்பத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மாணவிகள் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்களும், கணினி அறிவியல் துறை பேராசிரியர்களுமான முனைவர் மாலதி, முனைவர் சித்ரா, தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர் ஷீலா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...