கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிக்கான பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். புதிய உள் விளையாட்டு அரங்கங்களையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நிறுவனத்தால் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் இன்று (11.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் வார்டு எண் 39-க்கு உட்பட்ட மகாராணி அவென்யூ 5வது தெருவில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்போர் நல சங்கத்துடன் கலந்துரையாடினார். பின்னர், வார்டு எண் 75-க்கு உட்பட்ட கிருஷ்ணம்பதி குளக்கரையில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மத்திய மண்டலம் வார்டு எண் 83-க்கு உட்பட்ட நேரு உள் விளையாட்டு மைதானத்தின் எதிரே தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து மற்றும் கபடி உள் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர் Narmatha, செயற்பொறியாளர் Yogasithra (பொ), உதவி செயற்பொறியாளர் Savitha, Saravanakumar (பொ), மண்டல சுகாதார அலுவலர் Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Manjuladevi, Babu (பொ), Sathish மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...