மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளிக்க வந்த அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடையின் பூட்டை உடைத்தும், மது பாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது, அங்கு பணிபுரிவோர் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த மதுபானக் கடை ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இடத்திலேயே அரசு மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில் மதுபானக் கடை மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...