அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கும் புரூக்பாண்ட் மேம்பாலம்!

கோவை மாவட்டம் நஞ்சப்பா சாலை அடுத்து அமைந்துள்ள புரூக்பாண்ட் சாலை மேம்பாலமானது மிகவும் பிரசிதிபெற்ற போக்குவரத்து நெரிசல் நிறைந்த மேம்பாலமாகும். ஆர்.எஸ்.புரம், நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராம்நகர், அவிநாசி சாலை, உக்கடம் பகுதியை இணைக்கும் இப்பாளத்தினை நாள்தோறும் ஆயிரக் கணக்காகோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் அவ்வப்போது பெய்துவரும் மழையின் காரணமாக புரூக்பாண்ட் பாலத்தின் கீழ் வழித்தடத்தில் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.



இந்த வழித்தடத்தில் கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்லும் நிலையில், வாகனங்கள் வேகமாக செல்வதால் மழை நீருடன் கலந்த சாக்கடை நீர் வாகன ஓட்டிகள் மீது தெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



இதனிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்யவுள்ளதால் புரூக்பாண்ட் மேம்பாலத்தின் கீழ் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், எனது சிறு வயது காலம் முதலே புரூக்பாண்ட் மேம்பாலத்தின் அவினாசி சாலை செல்லும் கீழ் வழித்தடத்தில் மழைக்காலங்களில் இந்த நிலையே நீடித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகளே மூழ்கிவிடும் அளவிற்கு மழை நீர் இங்கு தேங்கி நிற்கும். 



மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும்போது இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைப்பர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...