வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று மதியம் 2 மணி அளவில் மேலும் மூவரின் உடல்கள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: வியட்நாமில் நடைபெற்ற படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜூலை 19 ஆம் தேதி வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ப்பு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன.



முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகியோரின் உடல்கள் மும்பையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தன. அங்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மற்றொரு விமானத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பிரபு ஆறுமுகம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன் ஆகியோரின் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளன.

இதற்காக கோவை விமான நிலையத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உடல்கள் வந்தடைந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களின் முன்னிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அழகுராஜனின் உடலைப் பெற கோவை விமான நிலைய சரக்கு முனையத்திற்கு வந்த அவரது நண்பர் வேல்முருகன், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.



மேலும், தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்த அழுகுராஜனின் வருமானத்தை நம்பியே அவரது கும்தும்பம் இருந்ததாகவும், எனவே அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...