சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலம்.


கோவை: ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்த இருவரை l கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரிகளின் செல்போன் எண்களை பெற்று, போலீசில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் தொடர்புகொண்டு வந்துள்ளனர்.

அவர்கள், "நீங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளீர்கள். உங்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், உங்கள் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பலர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த பின்னி மற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...