கோவையில் நடைபெறும் 17வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 600 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் - இண்டெக் தலைவர் சுந்தரம்

17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வரும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கண்காட்சி தொடர்பாக இண்டெக் தலைவர் சுந்தரம் கூறும்போது, ஜூன் 1- ம் தேதி துவக்க விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். வர்த்தகர்களுக்கான பார்வை நேரம் காலை 10 முதல் 2 மணி வரையும் பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

22000 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்குகள் அமைக்கபட்டு 536 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 50,000 வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகைதருவர் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 375 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இயந்திர உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்கி வருகிறது. இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் தற்போது தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் புதிய தொழில் துறையினர் 40 பேர் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி அரங்கு ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தற்போது தொழில் துறையினர் தொழில் துவங்க மூப்பேரிபாலையம் பகுதியில் 240 ஏக்கர் பரப்பளவிலும், செட்டிபாளையம் பகுதியில் 150 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டையும் அமையவுள்ளது. இதில், 300 தொழிற்சாலைகள் துவங்கபட்டு 12000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொழிற்பேட்டைகள் துவங்கப்பட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...