வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

தொழில் தொடங்க விழையும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (யூ.ஓய்.இ.ஜி.பி) திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் யூ.ஓய்.இ.ஜி.பி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம்  முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் அதிகபட்சமாக ரூ.1,25,000 வழங்கப்படும்.

தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர் திட்டமதிப்பில் 10 சதவீதம் முதலீடு செய்யவேண்டும். சிறப்புபிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர் /  பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / மகளிர் / முன்னாள் படைவீரர்கள் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்கள் ஆகியோர் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.  மீதமுள்ள முதலீட்டுத்தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் குடும்ப ஆண்டு வருமானம் 1,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு ஆதாரமாக சான்றுதி அலுவலர் (நோட்டரி பப்ளிக்) முன்னிலையில் மனுதாரர் அளித்த ஆணை உறுதி ஆவணம் சமர்ப்பித்தாலே போதுமானது. இக்கடன்கள் பெறுவதற்கு சொத்துப்பிணையம் தேவையில்லை. மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இக்கடன் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மனுதாரர்கள் நேரடியாகwww.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடன் விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், தாமே தயாரித்த திட்ட அறிக்கை, கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை, இனம்,  முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றிற்கான சான்று நகல்களுடன் இரட்டை நகல்களில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2 இராஜ வீதி, கோயம்புத்தூர் - 641  001  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...