வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...