ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகளிர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கோவை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டங்களை சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.



மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம், பொது கழிப்பிடம், வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.



அதேபோல், வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், உடையாம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மெய்நிகர் (AR & VR) ஆய்வகம் ஆகியவையும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.



வ.உ.சி. மைதானம் அருகே ரூ.196 லட்சத்தில் அமைக்கப்பட்ட கையுந்து (Volleyball) உள்விளையாட்டு அரங்கம், ரூ.5.15 கோடியில் கட்டப்பட்ட கபடி உள்விளையாட்டு அரங்கம், ரூ.96 லட்சம் மதிப்பிலான வுசூ (Wushu) உள்விளையாட்டு அரங்கம் மற்றும் தனியார் பங்களிப்பில் ரூ.1.50 கோடியில் உருவாக்கப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வே.சம்பத்குமார், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தரத்திலான உள்விளையாட்டு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றின் மூலம் மாணவர்கள் மற்றும் வீரர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, தெலுங்குபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் சுகுணாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மெய்நிகர் (AR & VR) ஆய்வகம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் காந்திபார்க் மற்றும் போத்தனூரில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்களையும் அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...