இலவச கல்வி திட்டத்தை வெளி மாநில, பிற மாவட்ட பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் அங்கேரிபாளையம் அருகில் ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவரையும் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரை வரவேற்றார். முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

அங்கன்வாடி ஆசிரியர்கள் எம்.கமல சரஸ்வதி, எஸ்.பிரியா, ஆத்துப்பாளையம் ஊர்த்தலைவர் கே.குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூருக்கு வசிக்க வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் அவர்களுடைய குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகிறார்கள்.

இதை தடுத்து நிறுத்தி அவ்வாறு வேலைக்கு செல்லும் குழந்தைகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து இலவச கல்வி அளிக்கும் பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் செய்து வருகிறோம்.

பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேலைக்கு செல்லும் குழந்தைகளை பற்றி 0422 - 2305445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகளை மீட்டு வந்து கல்வி அளிப்பதோடு குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி பயிற்றுனர் மீனா, தன்னார்வலர் பயிற்றுனர் சுப்புலட்சுமி உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முன்னாள் வார்டு கவுன்சிலர் எஸ்.செந்தில்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...