மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை தள்ளியதில் அவர் உயிரிழந்த வழக்கில், குணசேகரன் (29) என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக பெயிண்டிங் தொழிலாளியை தாக்கி கொலை செய்ததாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (29) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாஸ்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) ஆகியோர் பெயிண்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடப் பெயிண்டிங் பணிக்காக ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி மூலம் அழைத்து வரப்பட்டு, பணிபுரிந்த அதே கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர் இருவரும் மது அருந்தியபோது, பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த பி.வி.சி. குழாயால் வெங்கடேஷ் குணசேகரனை தாக்கியதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த குணசேகரன் வெங்கடேஷை பலமாகத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரன் அங்கிருந்து விலகிச் சென்று கட்டிடத்தின் மேல்தள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அவர்களுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் BNS 103, 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...