துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தியிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவு பரிசோதிக்கப்பட்டு, 100 டெசிபலுக்கு மேல் இருந்த ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும், மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக சாலைகளில் செல்ல உதவவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தியுள்ள வாகனங்கள், கண்கள் கூசும் LED விளக்குகள் பொருத்தியுள்ள வாகனங்கள் உள்ளிட்டவை நவீன கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மேற்கு மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெரியசாமி, கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் துடியலூர் பகுதியில் அதிரடி வாகனச் சோதனை நடத்தப்பட்டது. சாலையில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஹாரன்களை அடித்து நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவை பரிசோதித்தனர்.



100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பிய 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றில் இருந்து ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் கண்கள் கூசும் அளவுக்கு LED விளக்குகள் பொருத்தியிருந்த வாகனங்களில் இருந்து விளக்குகளும், பம்பர் பொருத்தியிருந்த வாகனங்களில் பம்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களை வே பிரிட்ஜ் மூலம் எடை போட்டு பரிசோதித்து, அதிக எடை ஏற்றி வந்த வாகனங்களுக்கு கூடுதலாக உள்ள ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், துரை, பிரேம்குமார் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தடுக்கவும் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...