புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மெய்நிகர் ஆய்வகம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளி குழந்தைகளுடன் மேயர் கலந்துரையாடினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தின் கீழ் வரும் புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 66-க்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் நேரில் சென்று பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

வெரினாடா உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மேயர், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கல்வி வழங்குவதற்காக மெய்நிகர் (AR & VR LAB) ஆய்வகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்று மேயர் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி வெரிவாடா ஆரம்பப் பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் கல்வி தேவைகள் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து விசாரித்தார். குழந்தைகளின் நலன் சார்ந்த விஷயங்களை மேயர் கவனமாக கேட்டறிந்து, தேவையான மேம்பாடுகளை செய்ய உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா(பொ), உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெ.யபார்வதி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், நவீன வசதிகளை வழங்குவதற்கும் கோயம்புத்தூர் மாநகராட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...