கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை eKYC பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார். தற்போது 95.82% பதிவு நிறைவடைந்துள்ளது.


Coimbatore: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வழங்கப்படும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க மத்திய அரசு விரல் ரேகை அடிப்படையிலான eKYC பதிவினை கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2023 முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.




தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.82 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.65 சதவீதமும் கைவிரல் ரேகை பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயனாளிகளின் பதிவினை நிறைவு செய்யும் நோக்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




100% eKYC பதிவினை நிறைவு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 2, 2026 அன்று கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை அல்லது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.




மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளும் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் 100% eKYC பணியினை நிறைவு செய்ய உறுதுணை செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar வேண்டுகோள் விடுத்துள்ளார். கைவிரல் ரேகை பதிவு செய்யாத பயனாளிகள் தவறாமல் ஆகஸ்ட் 2-ல் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...